search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது

    • வலிய படுக்கை பூஜை ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் வலிய படுக்கை பூஜை முக்கியமானது. இது ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். மாசிக்கொடை விழாவில் ஆறாம் நாள், அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்த பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் நடைபெறும்.

    நாளை கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்குநடை திறப்பு, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பிற்பகல் 12 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 5 மணிக்கு பஜனை, சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு நாதஸ்வரம், அத்தாழபூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×