search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சேவூர் அருகே புனித லூர்து அன்னை திருத்தல தேர் பவனி
    X

    சேவூர் அருகே புனித லூர்து அன்னை திருத்தல தேர் பவனி

    • இன்று அன்பின் விருந்து நடைபெறுகிறது.
    • இன்று சிறப்பு செபமாலை திருப்பலி நடக்கிறது.

    சேவூர் அருகே புளியம்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் லூர்துபுரம் கிராமம் உள்ளது. இங்கு புனித லூர்து அன்னையின் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் என்றும் வற்றாத நீருற்று (கிணறு) உள்ளது.

    அதனால் இத்திருத்தலத்தை புனித நீருற்று லூர்து அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினசரி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில், காலை 10 மணிக்கு துதிஆராதனை, காலை 11 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டுப்பாடல், திருப்பலி, நடைபெற்றது. இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு, இந்த திருத்தலத்தில் நடந்த புதுமைகளை மையமாக கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இன்று (ஞாயிறு) காலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி மோகன் மரிய திவ்ய ராஜின் திருப்பலி. காலை 8 மணிக்கு கோவை ஆயர் மேதகு எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருப்பலியும், காலை 11 மணி, கோவை மேய்ப்புப்பணி நிலைய அந்தோணி செல்வராஜின் சிறப்பு செபமாலை திருப்பலி, நவநாள் வேண்டுதல் தேர், மாலை 6 மணிக்கு, சிறுமுகை பங்குத்தந்தை, லூர்து இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை, திருப்பலியும், பின்னர் லூர்துபுரம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக அலங்கார தேர் பவனியும் நடைபெறும். தேர் திருவிழாவையொட்டி, நேற்று இரவு அன்பின் விருந்து நடைபெற்றது. அதே போல் இன்று காலை அன்பின் விருந்து நடைபெறுகிறது.

    Next Story
    ×