என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
8-வது நாளாக ஹாசனாம்பா கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தரிசனம்
- இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி நடை திறக்கப்படும்.
- வருகிற 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி நடை திறக்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 13-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.
தற்போது கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் 8-வது நாளான நேற்று ஹாசனாம்பா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஹாசன் தாலுகா பொம்மனஹள்ளியை சேர்ந்த கிரீஷ் (வயது 24) என்பவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவில் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவ முகாமுக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது கிரீஷ், மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இது ஹாசனாம்பா கோவிலுக்கு வந்த பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்