என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தஞ்சை மூலை அனுமார் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்19 Dec 2022 7:00 AM GMT
- அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக திகழ்கிறது.
- லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம் நடக்கிறது.
தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவிலை தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம், வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X