search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு விழா: காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கெங்கையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு விழா: காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • 14-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
    • 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடக்கிறது.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெறும் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடியாத்தம் வருவார்கள். இந்த ஆண்டுக்கான கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது.

    குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நேற்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலை வந்தடைந்தது.

    நள்ளிரவிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதியை அடைந்தது. காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் ஆய்வாளர் பாரி, ஊர்நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், 17-ந் தேதி பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.

    Next Story
    ×