search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் 3-ந்தேதி தேர்த்திருவிழா
    X

    கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் 3-ந்தேதி தேர்த்திருவிழா

    • 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • 6-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், அனுக்ஞை, சேனை முதல்வர் புறப்பாடு, மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு திருப்பாவை பாடல், தொடர்ந்து காலை 7.20 மணிக்கு கருட கொடி ஏற்றப்பட்டது. அதையடுத்து திருமலை அப்பன் அலங்காரத்தில் உபநாச்சியாருடன் வீதி உலாவும், இரவு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (திங்கட்கிழமை) திருப்பல்லக்கு, இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதி உலா, நாளை (செவ்வாய்க்கிழமை) திருப்பல்லக்கு, சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா, நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்க கருட சேவை, 29-ந்தேதி நாச்சியார் திருக்கோலம், ஊஞ்சல் சேவை, 30-ந்தேதி யானை வாகனம், 1-ந்தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், 2-ந்தேதி குதிரை வாகனம், வேடுபறி உற்சவம், 3-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தொடர்ந்து கோபுர வாசலில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 10-வது நாள் திருவிழாவான 4-ந்தேதி திருமஞ்சனமும், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், துவஜா அவரோஹணம், பூர்ணாகுதி நடக்கிறது. 5-ந்தேதி திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 6-ந்தேதி காலையில் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    Next Story
    ×