search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முதல் பூஜை பித்ருக்களுக்கே
    X

    முதல் பூஜை பித்ருக்களுக்கே

    • முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும்.
    • இதற்கு ஒரு புராண உதாரணம் இருக்கிறது.

    பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கடவுளுக்கு முதலில் பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது.

    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.

    பகவான் பாண்டுரங்கன் ஒரு தடவை தன் பக்தன் ஹரிதாசரைப்பார்க்க சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்கு பணி விடைகள் செய்து கொண்டிருந்தார்.

    பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானை பார்த்து, 'சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணி விடைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக் காட்டினாராம்.

    உடனே பகவான் பாண்டுரங்கன் அந்த செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணி விடைகளை முடித்து விட்டு வந்த பிறகு அவருக்கு பகவான் ஆசி வழங்கினாராம்.

    எனவே நம் வீட்டு பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய்-தந்தையை பட்டினிப்போட்டு விட்டு கோவிலுக்கு சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

    ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

    Next Story
    ×