என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கரிசல் முத்தாரம்மன் கோவிலில் 504 திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்28 May 2022 4:09 AM GMT (Updated: 28 May 2022 4:09 AM GMT)
தட்டார்மடம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழாவை முன்னிட்டு 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.
தட்டார்மடம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா நான்கு நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், முத்தாரம்மன், மாரியம்மன், பெரியம்மன், உஜ்ஜினியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேம் நடந்தது. பகல் 2 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானம் நடந்தது.
இரவு 7 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரண்டாவது நாள் பகல் 10 மணி, இரவு 7 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது. பகல் 2 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலமும், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
மூன்றாவது நாள் காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. இரவு 7 மணிக்கு நாட்டில் கன மழை வேண்டி 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. நான்காவது நாள் காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை நடந்தது.
இரவு 7 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரண்டாவது நாள் பகல் 10 மணி, இரவு 7 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது. பகல் 2 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலமும், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
மூன்றாவது நாள் காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. இரவு 7 மணிக்கு நாட்டில் கன மழை வேண்டி 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. நான்காவது நாள் காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X