என் மலர்
வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
திருப்பரங்குன்றத்தின் கதை
திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம்.
ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், தன்னுடன் இருந்த அம்பிகைக்கு, உலக உயிர்களின் படைப்புக்கு ஆதாரமாக அமைந்த ‘பிரணவ மந்திர’த் தினை உபதேசித்துக் கொண்டிருந்தார். அதனை குழந்தையாக தாயின் மடியில் அமர்ந்திருந்த முருகப்பெருமானும் கேட்டு ஞானம் பெற்றார். ஆனால் குருவால் உபதேசிக்கப்பட வேண்டிய ரகசியத்தை, மறைமுகமாக அறிந்து கொண்டதன் காரணமாக, முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. இதற்கு பரிகாரம் செய்யும் நோக்கில், பூலோகம் வந்து தவம் செய்தார், சிவ மைந்தன்.
அந்த தவத்தின் முடிவில் முருகப்பெருமானின் பாவம் விலகியது. அதோடு அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். அந்த தலமே ‘பரங்குன்றம்’ ஆகும். இதுவே முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக அமைந்தது. இந்த திருப்பரங்குன்றத்தில்தான், முருகப்பெருமான் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகளான தெய்வானையை மணம் செய்து கொண்டார். இந்த மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம். பவுர்ணமி அன்று, இந்த மலையைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அந்த தவத்தின் முடிவில் முருகப்பெருமானின் பாவம் விலகியது. அதோடு அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். அந்த தலமே ‘பரங்குன்றம்’ ஆகும். இதுவே முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக அமைந்தது. இந்த திருப்பரங்குன்றத்தில்தான், முருகப்பெருமான் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகளான தெய்வானையை மணம் செய்து கொண்டார். இந்த மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம். பவுர்ணமி அன்று, இந்த மலையைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
Next Story






