என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
நாதேகவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றபோது எடுத்த படம்.
நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி
By
மாலை மலர்29 Nov 2021 6:11 AM GMT (Updated: 29 Nov 2021 6:11 AM GMT)

நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்ட விழா அரங்கில் காலை 9 மணிக்கு மஹா கணபதி வேள்வியும், 10 மணிக்கு 152 தம்பதிகள் பூஜை, 152 மகாயாகம், அபிஷேகமும் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து 12 மணிக்கு ருத்ர பாராயணம், 12.30 மணிக்கு ருத்ர ஹோமமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கோவை யில் உள்ள அனைத்து மடங்களின் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை ஶ்ரீமத் தர்மராஜா அருள் பீடம், நிர்வாக குழு சிவ ஶ்ரீ கிருஷ்ண மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து 12 மணிக்கு ருத்ர பாராயணம், 12.30 மணிக்கு ருத்ர ஹோமமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கோவை யில் உள்ள அனைத்து மடங்களின் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை ஶ்ரீமத் தர்மராஜா அருள் பீடம், நிர்வாக குழு சிவ ஶ்ரீ கிருஷ்ண மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
