search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜர் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு
    X
    நடராஜர் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

    நடராஜர் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

    நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி ஏராளமான பெண்கள் விரதத்தை கடைபிடித்து வலம் வந்து தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. அதன்படி நேற்று கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே நீராடி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதில் நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி ஏராளமான பெண்கள் விரதத்தை கடைபிடித்து வலம் வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போன்று கோவிலில் உள்ள ஆதிமூலநாதர் சன்னதியையும் பெண்கள் 108 முறை வலம் வந்தனர். அதேநேரத்தில் கார்த்திகை மாதத்தில் நடராஜர் கோவிலுக்கு அதிகளவில் அய்யப்ப பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால் தற்போது அவர்களது வருகை குறைந்தே காணப்படுகிறது.
    Next Story
    ×