என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
Byமாலை மலர்22 Nov 2021 8:50 AM GMT (Updated: 22 Nov 2021 8:50 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி தேரோட்டமும், 20-ந்தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந் தேதி தேரோட்டமும் அன்று நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 20-ந் தேதி மார்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8.45 மணிக்கு மேல் தாணுமாலயசாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் நித்ய காரிய யோகஸ்தானிகர் ஆதிசேஷன் நம்பூதிரி மற்றும் திலீபன் நம்பூதிரி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை நாடக சங்க நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8.45 மணிக்கு மேல் தாணுமாலயசாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் நித்ய காரிய யோகஸ்தானிகர் ஆதிசேஷன் நம்பூதிரி மற்றும் திலீபன் நம்பூதிரி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை நாடக சங்க நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X