என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கால்நாட்டு விழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்20 Nov 2021 8:41 AM GMT (Updated: 20 Nov 2021 8:41 AM GMT)
குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும் அன்று நள்ளிரவு சப்தவர்ண நிகழ்ச்சியும், 20-ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, வில்லிசை கச்சேரி, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த தேர் திருவிழாவிற்கான கால்நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) கோவில் முன்பு நடக்கிறது.
முன்னதாக தாணுமாலயன் சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடக்கும். அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு கால்நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் இயல், இசைநாடக சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும் அன்று நள்ளிரவு சப்தவர்ண நிகழ்ச்சியும், 20-ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, வில்லிசை கச்சேரி, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த தேர் திருவிழாவிற்கான கால்நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) கோவில் முன்பு நடக்கிறது.
முன்னதாக தாணுமாலயன் சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடக்கும். அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு கால்நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் இயல், இசைநாடக சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X