என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் கோவிலில் கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்16 Nov 2021 7:05 AM GMT (Updated: 16 Nov 2021 7:05 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்க ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது
இதையொட்டி தினமும் காலை 10.15 மணிக்கு தாணுமாலய சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன சாத்தும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு கோவில் முழுவதும் தீப வரிசைகள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும், பஞ்சாட்சர ஜெப யோகமும், இரவு 7.30 மணிக்கு கோவில் திருச்சுற்றில் ஞான பிரகாசராய் விளங்கும் தாணுமாலயசாமி ரிஷப வாகனத்திலும், தீப பிரகாசராய் திகழும் திருவேங்கட விண்ணவ பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலய தொண்டர்கள் அறக்கட்டளையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
இதையொட்டி தினமும் காலை 10.15 மணிக்கு தாணுமாலய சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன சாத்தும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு கோவில் முழுவதும் தீப வரிசைகள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும், பஞ்சாட்சர ஜெப யோகமும், இரவு 7.30 மணிக்கு கோவில் திருச்சுற்றில் ஞான பிரகாசராய் விளங்கும் தாணுமாலயசாமி ரிஷப வாகனத்திலும், தீப பிரகாசராய் திகழும் திருவேங்கட விண்ணவ பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலய தொண்டர்கள் அறக்கட்டளையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X