search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றம் நடந்ததையும், முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.
    X
    கொடியேற்றம் நடந்ததையும், முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. பக்தர்கள் கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க அனுமதிக்கப் படாததையொட்டி கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி கந்தசஷ்டி திருவிழா 10-ம் தேதி நிறைவு பெற்றது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி பட்டாபிஷேகம், 19-ந்தேதி வழக்கம்போல் மலையில் மகாதீபம் ஏற்றுதல், 20-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×