search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய ரெங்கநாச்சியார்
    X
    ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய ரெங்கநாச்சியார்

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய ரெங்கநாச்சியார்

    4-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான 8-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    4-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    Next Story
    ×