search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரத்யங்கிரா தேவி
    X
    பிரத்யங்கிரா தேவி

    திருவிசநல்லூர் பிரித்யங்கராதேவி கோவிலில் சாகம்பரி அலங்காரம் இன்று நடக்கிறது

    திருவிசநல்லூர் பிரித்தியங்கராதேவி கோவிலில் ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் பிரித்திங்கராதேவி கோவில் உள்ளது. இங்கு 12 அடி உயரத்தில் பஞ்சமுக மகா மங்கள பிரித்தியங்கராதேவி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில் அமாவாசை நாட்களில் நிகும்பலா மகா யாகம் நடைபெறுவது வழக்கம். பிரித்தியங்கராதேவிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் சாகம்பரி அலங்காரம் நடைபெறும்.

    அதன்படி ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×