search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை
    X
    வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை

    ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை

    மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துக்கு பின்னர் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு மஞ்சள் தூள், திருமஞ்சனம், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, பன்னீர், குங்குமம், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.

    பின்னர் மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் துரைசாமி, உதவி அர்ச்சகர்கள் மனோஜ்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×