என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை
Byமாலை மலர்1 Oct 2021 5:48 AM GMT
அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு கஞ்சமலை சித்தேஸ்வரர் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அமாவாசை உற்சவத்தில் சாமி தரிசனம் செய்ய அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அன்றைய தினமும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே 6-ந் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவும், பொங்கல் வைக்கவும், வழிபாடு செய்யவும், அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு கஞ்சமலை சித்தேஸ்வரர் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அமாவாசை உற்சவத்தில் சாமி தரிசனம் செய்ய அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அன்றைய தினமும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே 6-ந் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவும், பொங்கல் வைக்கவும், வழிபாடு செய்யவும், அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X