search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிசநல்லூர் மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் காய்கறி அலங்காரம்
    X
    திருவிசநல்லூர் மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் காய்கறி அலங்காரம்

    திருவிசநல்லூர் மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் காய்கறி அலங்காரம்

    திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் பிரத்யங்கரா தேவிக்கு பல்வேறு காய்கறிகள் கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
    திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா பிரத்யங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை தோறும் நிகும்பலா யாகம் நடைபெறுவது வழக்கம்.

    புரட்டாசி செவ்வாய்க்கிழமையான நேற்று ராகுகாலத்தில் உற்சவர் பிரத்யங்கரா தேவிக்கு பல்வேறு காய்கறிகள் கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×