search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதி
    X
    சரஸ்வதி

    கலைகளின் அதிபதி

    இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியையும், பாரதிதேவி- மக்களுக்கு கல்வி ஞானத்தையும், சரஸ்வதி தேவி- வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் அருள்பவர் என்கிறார்கள்.
    படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாக, சரஸ்வதி வணங்கப்படுகிறார்.பிரம்மா மட்டுமின்றி அனைத்து உயிர்களின் நாவிலும் சரஸ்வதி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதனாலேயே அவளை ‘வாக்கு’க்கு அதிபதி என்கிறார்கள்.கலைகளின் அதிபதிசரஸ்வதியின் நான்கு கரங்களில் ஒன்றில் ஜெப மாலையும், மற்றொன்றில் ஏட்டுச் சுவடியும் இருக்கும், முன் இரண்டு கரங்களும் வீணையை மடியில் வைத்து மீட்டிய நிலையில் காணப்படும்.

    ரிக் வேதத்தில், சரஸ்வதியை நதியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இவர் கல்விக்கும், கலைகளுக்கும் அதிபதியாக விளங்குகிறார்.சரஸ்வதியை ‘கலைமகள்’ என்றும் அழைப்பார்கள். அவர் கையில் வைத்திருக்கும் ஜெபமாலைக்கு, ‘அட்சமாலை’ என்றும் பெயர்.

    தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்துவதற்காக இந்த மாலையை அவர் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.அழகிய தோற்றம் கொண்டவள், நான்கு கரங்களுடன் வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை தாமரையில் வீற்றிருப்பவள், சரஸ்வதி.சரஸ்வதி தனது கையில் ஏந்தியிருக்கும் வீணையானது, சிவபெருமானால் வழங்கப்பட்டது. அந்த வீணைக்கு, ‘கச்சபி’ என்று பெயர். இந்த வீணையானது, கலைகளின் திறமைகளை அருள்பவர் கலைவாணி என்பதை உணர்த்துவதாக உள்ளது.

    சரஸ்வதியின் முதன்மையான வாகனமாக அன்னப் பறவை உள்ளது. இது நற்பண்புகளை உணர்த்துவதாக கருதப்படுகிறது. பாலுடன் கலந்திருக்கும் தண்ணீரை தனியாக பிரித்து விட்டு பாலை மட்டும் அருந்தும் என்று அன்னப்பறவை பற்றி சொல்வார்கள். அதுபோல கல்வியாளர்கள் தீயவற்றை அகற்றி, நல்லவற்றை ஏற்க வேண்டும் என்பதையே அன்னப் பறவை குறிக்கிறதாம்.

    சரஸ்வதிக்கு மயிலும், ஆடும் கூட வாகனங்களாக வடமாநிலங்களில் இருக்கின்றன.சரஸ்வதியின் மற்றொரு கரத்தில் இருக்கும் ஓலைச் சுவடியானது, அவர் கல்விக்கு அதிபதி என்பதை எடுத்துரைப்பதாக இருக்கிறது.சரஸ்வதியை, துதிகளின் வடிவமாக இருப்பதால் ‘இடா’ என்றும், அறிவின் விளக்கமாக இருப்பதால் ‘பாரதி’ என்றும், ஞானத்தின் வடிவாக திகழ்வதால் ‘சரஸ்வதி’ என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன. இடாதேவி-

    இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியையும், பாரதிதேவி- மக்களுக்கு கல்வி ஞானத்தையும், சரஸ்வதி தேவி- வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் அருள்பவர் என்கிறார்கள்.
    Next Story
    ×