என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அக்னி தீர்த்த கடலில் நீராட தடை: சங்குமால் கடலில் நீராடிய பக்தர்கள்
Byமாலை மலர்7 Sep 2021 4:01 AM GMT
தடை காரணமாக சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடியது. சங்குமால் கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதுபோல் ஆவணி மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இதனால் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டு இருந்தன.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட நேற்று வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சங்குமால் அருகே உள்ள கடல் பகுதியில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனால் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டு இருந்தன.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட நேற்று வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சங்குமால் அருகே உள்ள கடல் பகுதியில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X