search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்
    X
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

    24 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பணிகள் மும்முரம்

    திருக்கடையூர் கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்- அபிராமி கோவில் உள்ளது. இந்த கோவில் அபிராமிபட்டராலும், சமய புலவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த சிறப்பு பெற்ற கோவிலில் 5 ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் பாலாலயம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அனைத்து கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×