search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடிப்பூரம் திருவிழாவுக்கான கொடியேற்றம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்.
    X
    ஆடிப்பூரம் திருவிழாவுக்கான கொடியேற்றம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் கொடியேற்று விழாவிற்கு வருகை தந்தவர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
    108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப் படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

    இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடியேற்ற விழா களை இழந்தது.

    பட்டாசாரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம் தேதியும், கருட சேவை 9-ம் தேதியும் நடைபெறும்.

    முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.
    Next Story
    ×