search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரதோஷத்தையொட்டி மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
    X
    பிரதோஷத்தையொட்டி மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

    பிரதோஷத்தையொட்டி மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

    மாதேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி காசி லிங்கேஸ்வரருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
    மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி காசி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாதேஸ்வரர், நந்தி எம்பெருமான், காசி லிங்கேஸ்வரருக்கு திருமஞ்சனம், மஞ்சள் தூள், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு உட்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சதீஷ்குமார் சிறப்பு பூஜைகளை செய்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து கொண்டும் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தலைமை அர்ச்சகர் துரைசாமி உதவி அர்ச்சகர் ரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×