search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரைகாளியம்மன்
    X
    மதுரைகாளியம்மன்

    மதுரைகாளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி மிக எளிமையான முறையில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி மிக எளிமையான முறையில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து மதுரைகாளியம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் மதுரைகாளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
    Next Story
    ×