என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஊஞ்சல் சேவை: சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்ற ஊஞ்சல் சேவையின் போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 5-ம் தேதியில் இருந்து கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஊஞ்சல் சேவையின் போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பக்தர்கள் முகக்கசவம் அணிந்து சமூக இடைவெளியுடனும் சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×