என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்
    X
    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை நீட்டிப்பு

    ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் செல்ல வனத்துறை தொடர்ந்து தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிப்பது குறித்து அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.

     எனவே சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×