என் மலர்
ஆன்மிகம்

கெங்கையம்மன்
கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழா
கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழா மிக எளிமையான முறையில் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கே.வி.குப்பம் தாலுகா வேப்பங்கனேரி கிராமத்தில் 129-ம் ஆண்டாக கெங்கையம்மன் திருவிழா மிக எளிமையான முறையில் நடந்தது. விழாவையொட்டி அம்மன் சிரசு பிள்ளையார் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் அலங்கரித்து வைத்திருந்த அம்மன் உடலில் பொருத்தப்பட்டு கண்திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம், அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கே.வி.குப்பம் போலீசார் மேற்பார்வையில் திருவிழா நடந்தது.
ஏற்பாடுகளை விழா குழுவினர் வேப்பங்கநேரி கிராம மக்கள் உதவியோடு செய்திருந்தனர்.
பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம், அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கே.வி.குப்பம் போலீசார் மேற்பார்வையில் திருவிழா நடந்தது.
ஏற்பாடுகளை விழா குழுவினர் வேப்பங்கநேரி கிராம மக்கள் உதவியோடு செய்திருந்தனர்.
Next Story






