என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்
    X
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மேலும் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி இந்த சிறப்பு யாக பூஜையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் தினந்தோறும் ஆயுட்ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தினந்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக 128 திரவிய பொருட்களுடன் பஞ்சாக்கர ஹோமம், 81 பத மந்திர ஹோமங்கள் செய்து ஓதுவார்கள் பதிகங்களை பாடினர்.

    இதனையொட்டி 2 வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு கோவில் பிரகாரங்களை வலம் வந்தனர். பின்னர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி இந்த சிறப்பு யாக பூஜையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×