என் மலர்
ஆன்மிகம்

எர்த்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா
எர்த்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா
குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது.தொடர்ந்து சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கண் திறந்து வைக்கப்பட்டது.
குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டபின் கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கண் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றியும் சுமார் அரைமணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் தாசில்தார் வத்சலா, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் பாபு, சீனிவாசன் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றியும் சுமார் அரைமணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் தாசில்தார் வத்சலா, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் பாபு, சீனிவாசன் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story