search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் பெரிய தேர் திறந்த நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் பெரிய தேர் திறந்த நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரின் மரசிற்பங்கள் பழுதடையும் அவல

    திறந்த வெளியில் நிற்கும் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரின் மரசிற்பங்கள் பழுதடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்காக பெரியதேர், சிறியதேர் என 2 தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேருக்கு சித்திரை மாதமும், சிறிய தேருக்கு தை மாதமும் தேரோட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று பெரிய தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையொட்டி கடந்த மார்ச் 29-ந்தேதி முதல் தேர் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. பின்னர் தேரின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் தேரோட்டம் நடக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மழை, வெயில், பனியால் நனையாமல் பாதுகாக்கும் வகையில் பல லட்ச ரூபாய் செலவில் மேற்கூரை அமைக்கப்பட்டு பாரமரிக்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என்று இருந்த நிலையில் அதன் மேற்்கூரை பிரிக்கப்பட்டு தேர் கட்டுமான பணி நடைபெற்றது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இ்தையடுத்து சாரங்கபாணி கோவில் தேரோட்டம் ரத்தானது. இதனால் தேர் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் நடைபெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் மேற்கூரை பிரிக்கப்பட்டு 2 மாதங்களாக திறந்த வெளியில் கிடக்கிறது. இதனால் மழை மற்றும் வெயில் காரணமாக தேரின் மரசிற்பங்கள் பழுதடையும் அவலம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே முன்பு இருந்தது போல் மீண்டும் தேரின் மரசிற்பங்களுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×