என் மலர்
ஆன்மிகம்

உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
திருவானைக்காவல் கோவிலில் 6-ம் நாள் வசந்த உற்சவம் விழா
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றுவரும் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலின் உள்ளேயே பக்தர்கள் இன்றி விழா நடந்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலின் உள்ளேயே பக்தர்கள் இன்றி விழா நடந்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Next Story






