search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா
    X
    வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா

    வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா

    விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
    முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று காலை கோவில் வளாகத்திலேயே கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இதில் வருகிற 25-ந் தேதி பொங்கல் திருவிழாவும், 26-ந் தேதி அக்னிச்சட்டி திருவிழாவும், 27-ந் தேதி தேரோட்டமும் கோவில் வளாகத்தின் உள்ளேயே நடைபெறுகிறது. 29-ந் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    கொரோனா தொற்றால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×