என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கருட சேவைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பது ஏன்?
Byமாலை மலர்7 May 2021 4:47 AM GMT (Updated: 7 May 2021 4:47 AM GMT)
திருமாலின் இரண்டு திருவடிகளையும், தன்னுடைய கரங்களால் கருடன் தாங்கிவரும் காட்சியையே ‘கருட சேவை’ என்று ஆலயங்களில் கொண்டாடுவார்கள்.
மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் கருடன், ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். திருமாலின் இரண்டு திருவடிகளையும், தன்னுடைய கரங்களால் கருடன் தாங்கிவரும் காட்சியையே ‘கருட சேவை’ என்று ஆலயங்களில் கொண்டாடுவார்கள். மகாவிஷ்ணு மற்றும் கருடன் ஆகியோரின் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது மிகப்பெரிய சிறப்பு என்பதால், கருட சேவைக்கு பக்தர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். கருடனைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* ‘திருமாலும், கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் உள்ள ‘அனுசாசன பர்வம்’ கூறுகிறது.
* கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி.
* ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும்.
* கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு.
* வைணவ ஆழ்வார்கள், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும்.
* மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருட வியூகம் அமைத்து போர் நடந்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
* வைகுண்டத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட வைரமுடி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோவிலில் உள்ளது. பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை இங்கு நடக்கிறது.
* ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ரெங்கமன்னார், ஆண்டாள் இருவரும், கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருகின்றனர். இங்கு பெருமாளுக்கு, மாமனார் ஸ்தானத்தில் கருடன் இருக்கிறார்.
* திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் வீற்றிருக்கும் கருடன், வைகுண்டத்தில் எழுந்தருளியுள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.
* கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் இருக்கிறார்.
* ‘திருமாலும், கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் உள்ள ‘அனுசாசன பர்வம்’ கூறுகிறது.
* கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி.
* ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும்.
* கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு.
* வைணவ ஆழ்வார்கள், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும்.
* மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருட வியூகம் அமைத்து போர் நடந்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
* வைகுண்டத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட வைரமுடி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோவிலில் உள்ளது. பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை இங்கு நடக்கிறது.
* ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ரெங்கமன்னார், ஆண்டாள் இருவரும், கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருகின்றனர். இங்கு பெருமாளுக்கு, மாமனார் ஸ்தானத்தில் கருடன் இருக்கிறார்.
* திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் வீற்றிருக்கும் கருடன், வைகுண்டத்தில் எழுந்தருளியுள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.
* கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X