என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 18-ந்தேதி தொடக்கம்
Byமாலை மலர்4 May 2021 7:17 AM GMT (Updated: 4 May 2021 7:17 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அனைத்து நிகழ்ச்சிகளும் கொரோனா வழிகாட்டுதல் படி ஏகாந்தமாக நடக்கிறது. 17-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
18-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன சேவை, 19-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 20-ந்தேதி காலை சிம்ம வாகன சேவை, இரவு முத்துப்பந்தல் வாகன சேவை, 21-ந்தேதி கல்ப விருட்ச வாகன சேவை, இரவு சர்வ பூபால வாகன சேவை, 22-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு சேவை, இரவு கருட சேவை.
23-ந்தேதி காலை அனுமந்த வாகன சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 24-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 25-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவை, 26-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கோவிந்தராஜசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
18-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன சேவை, 19-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 20-ந்தேதி காலை சிம்ம வாகன சேவை, இரவு முத்துப்பந்தல் வாகன சேவை, 21-ந்தேதி கல்ப விருட்ச வாகன சேவை, இரவு சர்வ பூபால வாகன சேவை, 22-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு சேவை, இரவு கருட சேவை.
23-ந்தேதி காலை அனுமந்த வாகன சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 24-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 25-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவை, 26-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கோவிந்தராஜசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X