என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு இன்று வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்27 April 2021 4:35 AM GMT (Updated: 27 April 2021 4:35 AM GMT)
சித்ரா பவுர்ணமியையொட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்பவுர்ணமி அன்று சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான சித்ராபவுர்ணமி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதன் பிறகு அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வருதல், 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
கொரானா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்து வருகிறார்.
காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வருதல், 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
கொரானா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X