என் மலர்
ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு இன்று வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு
சித்ரா பவுர்ணமியையொட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்பவுர்ணமி அன்று சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான சித்ராபவுர்ணமி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதன் பிறகு அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வருதல், 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
கொரானா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்து வருகிறார்.
காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வருதல், 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
கொரானா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்து வருகிறார்.
Next Story