என் மலர்
ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின்றி நடந்த பூஜை
நேற்று முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோவில் பணியாளர்கள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக தினமும் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.
நேற்று முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோவில் பணியாளர்கள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடக்கும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் பரபரப்பாக காணப்படும் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
நேற்று முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோவில் பணியாளர்கள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடக்கும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் பரபரப்பாக காணப்படும் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story