என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பட்டாபிஷேக விழா
Byமாலை மலர்24 April 2021 8:17 AM GMT (Updated: 24 April 2021 8:17 AM GMT)
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பட்டாபிஷேக விழாயையொட்டி சுப்ரபாதம், தோமாலா சேவா, சஹஸ்ரநாமர்ச்சனை, உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று இரவு ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதம், தோமாலா சேவா, சஹஸ்ரநாமர்ச்சனை, காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராம பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக விஸ்வசேனர் பூஜை, புண்யாவதனம், சத்யோ அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், அக்னி பிரதிஷ்டை, யஜ்மணி சங்கல்பம், சாமிக்கு வஸ்திர சமர்ப்பணம், லட்சுமி பிரதிமா பூஜை, சாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர், அஞ்சநேயருக்கு பிரத்யேக ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. மேலும் ஆரத்தி, சதுர்வேத பாராயணம், மகா மங்கள ஹாரத்தி, ேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ராமர் பட்டாபிஷேக விழா முடிந்ததும் கோவில் வளாகத்தில் உற்சவர்கள் உலா வந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கண்காணிப்பாளர் ஸ்ரீ ரமேஷ், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராம பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக விஸ்வசேனர் பூஜை, புண்யாவதனம், சத்யோ அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், அக்னி பிரதிஷ்டை, யஜ்மணி சங்கல்பம், சாமிக்கு வஸ்திர சமர்ப்பணம், லட்சுமி பிரதிமா பூஜை, சாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர், அஞ்சநேயருக்கு பிரத்யேக ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. மேலும் ஆரத்தி, சதுர்வேத பாராயணம், மகா மங்கள ஹாரத்தி, ேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ராமர் பட்டாபிஷேக விழா முடிந்ததும் கோவில் வளாகத்தில் உற்சவர்கள் உலா வந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கண்காணிப்பாளர் ஸ்ரீ ரமேஷ், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X