என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 16-ந்தேதி தொடக்கம்
Byமாலை மலர்14 April 2021 2:30 AM GMT (Updated: 13 April 2021 8:01 AM GMT)
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 40-வது பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஆகியோர் முன்னிலையில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு கிராம தேவதை செல்லியம்மன் உற்சவம், 15-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் ஆகியவை நடக்கிறது. 16-ந் தேதி காலை 9.30 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தினமும் காலை மற்றும் மாலையில் நடைபெறும் பஞ்சமூர்த்திகள், விநாயகர், சந்திரசேகர் புறப்பாடு மற்றும் சாமி வீதிஉலா ஆகியவை இந்தாண்டு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பஞ்சமூர்த்திகள், விநாயகர், சந்திரசேகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், 22-ந் தேதி காலை 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 23-ந் தேதி காலை பிச்சாண்டவர் உற்சவம், 25-ந் தேதி காலை 8.30 மணிக்கு நடராஜர் அபிஷேகம், தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
26-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கிறது. 27-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம், 28-ந் தேதி மாலை 6 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு கிராம தேவதை செல்லியம்மன் உற்சவம், 15-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் ஆகியவை நடக்கிறது. 16-ந் தேதி காலை 9.30 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தினமும் காலை மற்றும் மாலையில் நடைபெறும் பஞ்சமூர்த்திகள், விநாயகர், சந்திரசேகர் புறப்பாடு மற்றும் சாமி வீதிஉலா ஆகியவை இந்தாண்டு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பஞ்சமூர்த்திகள், விநாயகர், சந்திரசேகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், 22-ந் தேதி காலை 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 23-ந் தேதி காலை பிச்சாண்டவர் உற்சவம், 25-ந் தேதி காலை 8.30 மணிக்கு நடராஜர் அபிஷேகம், தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
26-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கிறது. 27-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம், 28-ந் தேதி மாலை 6 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X