
விழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் விழா இன்று இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.
11-ந் தேதி பூப்பல்லக்கும், 12-ந் தேதி சட்டத்தேரில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும். 13-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.