என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் திருவிழா
Byமாலை மலர்8 April 2021 3:08 AM GMT (Updated: 8 April 2021 3:08 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
விழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் விழா இன்று இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.
11-ந் தேதி பூப்பல்லக்கும், 12-ந் தேதி சட்டத்தேரில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும். 13-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் விழா இன்று இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.
11-ந் தேதி பூப்பல்லக்கும், 12-ந் தேதி சட்டத்தேரில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும். 13-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X