search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் அம்மையார்
    X
    காரைக்கால் அம்மையார்

    அமர்ந்த நிலையில் அம்மையார்

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே, அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். அதற்கு காரணம் இருக்கிறது.
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே, அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். அதற்கு காரணம் இருக்கிறது. கணவர் தன்னுடன் வாழ மறுத்ததும், இறைவனை வேண்டி பேய் உருவம் பெற்றார், புனிதவதி. பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார்.

    இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், ‘அம்மையே அமர்க’ என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
    Next Story
    ×