என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்20 March 2021 8:46 AM GMT (Updated: 20 March 2021 8:46 AM GMT)
குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.
குமரியின் குருவாயூர் என பறக்கை மதுசூன பெருமாள் கோவில் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் தங்கத்தாலான கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணி அளவில் கொடி பட்டம் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 8.50 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் பறக்கை ஊராட்சி மன்ற தலைவி கோசலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கோவில் நிர்வாகிகள், மதுசூதன பெருமாள் சேவா சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேர்களுக்கு கால்நாட்டு விழா நடந்தது.
விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, அலங்கார தீபாராதனை, தோல் பாவைக்கூத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 23-ந்தேதி இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சி அருளல் நிகழ்ச்சி, 27-ந்தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்த வர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் திருவிழாவான 28-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்நிர்வாகம், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணி அளவில் கொடி பட்டம் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 8.50 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் பறக்கை ஊராட்சி மன்ற தலைவி கோசலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கோவில் நிர்வாகிகள், மதுசூதன பெருமாள் சேவா சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேர்களுக்கு கால்நாட்டு விழா நடந்தது.
விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, அலங்கார தீபாராதனை, தோல் பாவைக்கூத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 23-ந்தேதி இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சி அருளல் நிகழ்ச்சி, 27-ந்தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்த வர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் திருவிழாவான 28-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்நிர்வாகம், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X