
வருகிற 30-ந் தேதி கோவிலின் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அன்று நள்ளிரவு கோவிலின் உள் மற்றும் வெளி பகுதிகளில் பக்தர்கள் உருண்டு கொடுத்தும், கோவிலை சுற்றி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
31-ந் தேதி ஏராளமானோர் உடல் முழுவதும் சேறுபூசி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மேலும் அக்கினிச்சட்டி, பால்குடம், பூப்பெட்டி, பூக்குழி இறங்குதல், கரும்பாலை தொட்டில், போன்ற நேர்த்திக் கடன்களும், 21, 51, 101 சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
அடுத்த மாதம் 2-ம்தேதி 2001 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 3-ந் தேதி முளைப்பாரி திருவிழாவுடன் பங்குனித்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின் முறையார்கள் செய்து வருகின்றனர்.