என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்20 March 2021 3:01 AM GMT (Updated: 20 March 2021 3:01 AM GMT)
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கும் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்தும் பால்குடம் சுமந்து வந்தும் முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்தும் பால்குடம் சுமந்து வந்தும் முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X