search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவசக்தி
    X
    சிவசக்தி

    நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது

    மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, நிர்மால்யம், அபிஷேகம், கணபதிஹோமம், 5 மணிக்கு அம்மச்சியார் பொட்டல் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மீது கொடி பவனி புறப்படுதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு உஷ பூஜை, 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், 9.15 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி, 11 மணிக்கு களபாபிஷேகம், கலசபூஜை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, 12.15 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி உணர்த்தல், 9 மணிக்கு பஜனை, 11 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 24-ந்தேதி சமய மாநாடு, 28-ந்தேதி காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், 29-ந்தேதி காலை 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், மதியம் 2 மணிக்கு யானை மீது சந்தனகுடம் பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு அலங்கார சிறப்பு பூஜை நடக்கிறது.

    30-ந்தேதி காலை 8 மணிக்கு கடலில் புனிதநீர் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், 10 மணிக்கு கொடைவிழா பூஜை, அதிகாலை 2 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடர்ந்து வாணவேடிக்கை ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை நடுவூர்கரை சிவசக்தி கோவில் நிர்வாகிகள் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாககுழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், சடையன், குமரேசன், நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×