
அப்போது ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் இருந்தே ராமேசுவரம் நடராஜபுரம், புதுரோடு, ராமகிருஷ்ணாபுரம், சம்பை, மாங்காடு, கந்தமாதனபர்வதம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்து பால்குடம் சுமந்து வந்து முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பங்குனி உத்திர திருவிழா தொடங்கி உள்ளதை தொடர்ந்து ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.