என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவ திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்17 March 2021 9:55 AM GMT (Updated: 17 March 2021 9:55 AM GMT)
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். விழாவையொட்டி தினமும் சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை நிகழ்ச்சி 23-ந் தேதியும், 28-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழா வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகின்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, பேஸ்கார் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அன்றைய தினம் இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். விழாவையொட்டி தினமும் சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை நிகழ்ச்சி 23-ந் தேதியும், 28-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழா வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகின்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, பேஸ்கார் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X