
அன்றைய தினம் இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். விழாவையொட்டி தினமும் சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை நிகழ்ச்சி 23-ந் தேதியும், 28-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழா வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகின்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, பேஸ்கார் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.