என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் 19-ந்தேதி பங்குனி திருவிழா தொடங்குகிறது
Byமாலை மலர்17 March 2021 9:37 AM GMT (Updated: 17 March 2021 9:37 AM GMT)
திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான 11 நாட்கள் பங்குனி திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பாகும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். கடந்த வருடம் கொரோனா தாக்குதலால் திருவிழா கோவிலுக்குள் மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழா வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ம் தேதி காலை 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும், மறுநாள் 9-ம் திருவிழாவாக தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X