என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா 19-ம்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்17 March 2021 9:26 AM GMT (Updated: 17 March 2021 9:26 AM GMT)
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
குமரியின் குருவாயூர் ஆகவும், தங்கக் கொடிமரம் உடைய கோவிலாகவும் திகழும் பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு பூ பந்தல் வாகனத்தில் சுவாமி பவனி வருதல் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனியும், பக்தி பஜனையும், இன்னிசை கச்சேரியும், தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது.
23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சி அருளும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. அன்று இரவு 9மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது. 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், .மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு பூ பந்தல் வாகனத்தில் சுவாமி பவனி வருதல் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனியும், பக்தி பஜனையும், இன்னிசை கச்சேரியும், தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது.
23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சி அருளும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. அன்று இரவு 9மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது. 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், .மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X